செய்திகள் :

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

post image

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.

மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலுள்ள உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் என்.சி.சி.யில் இருக்கிறார்.

சாலமன் டேவிட்டிடம் தனித் திறமை இருப்பதை அறிந்த பட்டாலியன் லெப்டினென்ட் கர்னல் கார்த்திகேயன் மற்றும் சக அதிகாரிகள் அவரது திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த ஊக்கத்தால் மாணவன் சாலமோன் டேவிட் தற்போது ஸ்மார்ட் ஷூ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது கன்னிவெடிகளில் இருந்து தப்பிக்க இந்த ஷூ உதவிகரமாக இருக்கும்.

இந்த ஷூ அணிந்து ராணுவ வீரர்கள் நடக்கும் போது சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் கண்ணிவெடி இருந்தால் கூட அது குறித்து சிக்னல் கொடுத்து எச்சரிக்கும். அதற்கான சென்சார் கருவியுடன் இந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவரின் இந்த கண்டுபிடிப்பு அசாத்தியமானது என்பதால், தமிழ்நாடு சார்பாக தில்லியில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சாலமோன் டேவிட் பங்கேற்றார்.

சுமார் 55 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் சாலமன் டேவிட் கண்டுபிடிப்புக்கு முதலிடம் கிடைத்தது. தொடர்ந்து, இந்த ஷூவை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் காண்பித்து மாணவன் வாழ்த்து பெற்றார்.

பின்னர், நெல்லை வந்த மாணவனை நெல்லை சரக டி ஐ ஜி மூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 12) சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழ... மேலும் பார்க்க

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வ... மேலும் பார்க்க

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.இது குறித்... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக... மேலும் பார்க்க