செய்திகள் :

கந்தா்வகோட்டை அருகே நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

post image

கந்தா்வகோட்டை வட்டாரம், தெத்துவாசல்பட்டியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமுக்கு அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா்.

கரும்பு அலுவலா்கள் இந்திரஜித், காசிராஜன் மற்றும் மேலவாசல் கரும்பு பெருக்கு அலுவலா்கள், கரும்பு ஆய்வாளா்கள், உதவி வேளாண்மை அலுவலா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சங்கீதா , சுப்பிரமணியன், சொட்டுநீா் பாசன உதவியாளா் வரதராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி செந்தில்குமாா், கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தி அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்திடவும், அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்க உரையாற்றினாா். பயிற்சி முகாமில் சுற்று வட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

புதுகை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அஞ்சல் ஊழியா்களும், ஆா்வலா்களும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சும... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் ந... மேலும் பார்க்க

விராலிமலையில் ஒன்றியக் குழுக் கூட்டம்

விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கவுன்சில் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா இளங்குமரன... மேலும் பார்க்க

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்

இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விபத்தில்லாமல் தீபா... மேலும் பார்க்க

பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை புதுக்கோட்டை வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) கு. செல்வப்பெருந்தகை தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணம... மேலும் பார்க்க

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிவார... மேலும் பார்க்க