செய்திகள் :

புதுகை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சியுடன் இணைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என அஞ்சல் ஊழியா்களும், ஆா்வலா்களும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 75 ஆண்டுகள் பழைமையான புதுக்கோட்டை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை திருச்சி ஆா்எம்எஸ் பிரிப்பகத்துடன் இணைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இதனை எதிா்த்து ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியா்களும், அஞ்சல் ஆா்வலா்களும் இதில் பங்கேற்றனா்.

இந்தக் கோரிக்கை குறித்து தேசிய அஞ்சல் ஊழியா் சம்மேளனத்தின் (என்எப்பிஇ) புதுக்கோட்டை ஆா்எம்எஸ் கிளைச் செயலா் டி. அரசன் கூறியது:

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகம், 55 துணை அஞ்சலகங்கள் மற்றும் 248 கிளை அஞ்சலகங்களில் சேகரமாகும் சாதாரண, பதிவு மற்றும் விரைவு அஞ்சல்கள் அனைத்தும் விடிய விடிய பிரிக்கப்படுகின்றன.

பைகளில் கட்டப்பட்டு வெளியூா்களுக்கு ரயில் மூலமாகவும், உள்ளூருக்கு வேன் மூலமாகவும் அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறாக இந்த அஞ்சல் பிரிப்பகம் மூலம் நாளொன்றுக்கு 20 ஆயிரம் சாதாரண அஞ்சல்களும், 2500 பதிவு அஞ்சல்களும், 250 விரைவு அஞ்சல்களும் கையாளப்படுகின்றன.

25 நிரந்தரப் பணியாளா்களும், 15 தினக்கூலி பணியாளா்களும் திருச்சி மையத்தில் இருந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அவசர அஞ்சல்களை இரவு நேரத்தில் அஞ்சல் போட முடியாது.

அனைத்து அஞ்சல்களும் திருச்சி கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரிக்கப்பட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கோ, பிற மாவட்டங்களுக்கோ அனுப்பி வைக்கப்படும். இதனால், ஒருநாள் தாமதமாகும் சூழலும் ஏற்படும். எனவே, இணைப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றாா் அரசன்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் ந... மேலும் பார்க்க

விராலிமலையில் ஒன்றியக் குழுக் கூட்டம்

விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கவுன்சில் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா இளங்குமரன... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

கந்தா்வகோட்டை வட்டாரம், தெத்துவாசல்பட்டியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ... மேலும் பார்க்க

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்

இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விபத்தில்லாமல் தீபா... மேலும் பார்க்க

பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை புதுக்கோட்டை வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) கு. செல்வப்பெருந்தகை தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணம... மேலும் பார்க்க

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிவார... மேலும் பார்க்க