செய்திகள் :

கன்னடத்தின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் சரோஜா தேவி!

post image

இந்திய திரையுலக வரலாற்றில் அதிக திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி (வயது 87), உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னடத்தின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்

13 வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த சரோஜா தேவியை கண்ட இயக்குநர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவருக்கு படவாய்ப்பு அளித்துள்ளார். ஆனால், அப்போது அந்த வாய்ப்பை சரோஜா தேவி நிராகரித்துவிட்டார்.

பின்னர், 1955 ஆம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இந்திய திரைத்துறையில் 17 வயதில் அறிமுகமானார் சரோஜா தேவி. தான் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்றார்.

தமிழில் 1956 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திருமணம் திரைப்படம் மூலம் அறிமுகமான சரோஜா தேவி, எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுக்கு நாயகியாக பல படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, ரசிகர்களால் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 26 படங்களிலும் சிவாஜியுடன் 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் சரோஜி தேவி ஜோடியாக நடித்துள்ளார்.

இவருக்கும் 1967 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற பிறகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

1955 முதல் 1984 வரையிலான 29 ஆண்டுகள் திரைத்துறையின் உச்ச நாயகியாக இருந்த சரோஜா தேவி, கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் 161 படங்களில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இந்திய திரையுலகில் எந்த நாயகியும் இத்தனை படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை.

இவரின் திரை வாழ்க்கையைப் போற்றும் விதமாக வாழ்நாள் சாதனையாளர், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.

தமிழக அரசு கலைமாமணி விருதும், பெங்களூர் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கி சரோஜா தேவியை கெளரவித்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

பெங்களூரில் காவல் அதிகாரியின் நான்காவது மகளாக 1938 ஆம் ஆண்டு பிறந்தவர் சரோஜா தேவி. இளம்வயதிலேயே சரோஜா தேவியின் திறமையை அடையாளம் கண்ட அவரது தந்தை, நடனம் கற்றுக்கொள்ள ஊக்குவித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்ற பொறியாளரை சரோஜா தேவி திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஊக்குவிப்புடன் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்தார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

Saroja Devi, who holds the distinction of having acted in the most films as a heroine in the history of Indian cinema, passed away on Monday morning due to old age.

இதையும் படிக்க : சரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...!

வாழ்க்கைனா சந்தோஷமா இருக்கணும்... மாரீசன் டிரைலர்!

நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் டிரைலர் வெளியானது.ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து ... மேலும் பார்க்க

நடிகரான அல்ஃபோன்ஸ் புத்திரன்!

பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் நடிகராக அறிமுகமாகிறார்.பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது, தன் 25-வது படத்தில் நடித்து வருகிறார். உன்... மேலும் பார்க்க

தமிழ் சீரியலில் நடிக்கும் தெலுங்கு நடிகர்!

தமிழ் சின்ன திரை தொடரில் தெலுங்கு நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடமதி சந்தியாராகம் தொடரில் நாயகனாக நடித்து புகழ் பெற்றவர். தற்போது, ஜீ தம... மேலும் பார்க்க

நடிகை சரோஜா தேவிக்கு நாளை இறுதிச் சடங்கு!

மல்லேஸ்வரம்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவிருக்கிறது.தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200க்கும மேற்பட்ட ... மேலும் பார்க்க

விஷால் - 35 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் விஷால் நடிக்கவுள்ள அவரின் 35-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல்! தமிழில் புதிய ரொமான்டிக் சீரியல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற புதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைப் போலவே ஒரு ஆண், இரு பெண்களுடன் கொள்ளும் காதல் கதையை மையமாக... மேலும் பார்க்க