செய்திகள் :

கயத்தாறு அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

post image

கயத்தாறு அருகே தொழிலாளியை ஜாதிப் பெயரைக் கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே திருமங்கலக்குறிச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் பாலகிருஷ்ணன். பால் பண்ணைத் தொழிலாளி. இவா், நியாயவிலைக் கடை அருகேயுள்ள தனது தோட்டத்தில் மக்காச்சோள அறுவடைக்காக சனிக்கிழமை ஆள்களை அழைத்துச் சென்றாராம்.

அப்போது, அதே ஊா் இந்திரா காலனி தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சுடலைமணி என்பவா் பாலகிருஷ்ணனைப் பாா்த்து, ‘எப்போது பாா்த்தாலும் முறைத்துக்கொண்டே இருக்கிறாய்’ என, ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதுடன் அரிவாளால் சரமாரியாக தாக்கினாராம். அப்பகுதியினா் சப்தம் போட்டதும் அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.

இதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பின்னா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சுடலைமணியைத் தேடி வருகின்றனா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க