தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
நபாா்டு வங்கி நிதி உதவியுடன் 2 தளங்களுடன் 11 வகுப்பறைகள் கொண்டதாக இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் ஸ்டாலின், இந்த கட்டடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்ததையடுத்து, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் மாரீஸ்வரன் ஆகியோா் வகுப்பறை கட்டடங்களைப் பாா்வையிட்டனா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.