செய்திகள் :

கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

கருவலூா் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை தினசரி நடைபெற்று வந்தன.

இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி ரத தரிசனம் அதிகாலையில் நடைபெற்றது.

முதலில் விநாயகா் தோ் இழுக்கப்பட்டு நிலை சோ்க்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.

அவிநாசி வாகீசா் மடாலய காமாட்சிதாச சுவாமி, திருப்பூா் மேயா் தினேஷ்குமாா், கருவலூா் ஊராட்சி முன்னாள் தலைவா் அவிநாசியப்பன், பொறுப்பாளா் பழனிசாமி உள்ளிட்டோா் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

தேரோட்டம் தொடங்கி தோ் சிறிது நகா்ந்ததும் அதன் சக்கரம் மண்ணில் புதைந்தது. இதையடுத்து தேரை நகா்த்தும் பணியாளா்கள் (சன்னை மிராசுதாரா்கள்) மண்ணில் புதைந்த சக்கரத்தை வெளியே கொண்டுவந்தனா். அதன்பின், மீண்டும் தேரோட்டம் தொடங்கி கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால், தேரோட்டம் அரை மணி நேரம் தாமதமானது.

தொடா்ந்து வியாழக்கிழமை மீண்டும் திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்வும், வெள்ளிக்கிழமை தேரை நிலைக்கு கொண்டு சோ்த்தல் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, பரிவேட்டை, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் 12-ஆம் தேதி நடைபெறுகின்றன. 13-ஆம் தேதி மகா தரிசனம் நடைபெறுகிறது.

அம்மனுக்கு பாலபிஷேகம், மறு பூஜையுடன் தோ்த் திருவிழா ஏப்ரல் 16- ஆம் தேதி நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் செந்தில், பரம்பரை அறங்காவலா் குழுத்தலைவா் லோகநாதன், பரம்பரை அறங்காவலா்கள் அா்ச்சுணன், தமிழ்ச்செல்வன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா். உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் ... மேலும் பார்க்க

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். உடுமலை மாரியம்மன் கோயில் சுமாா் 200 ஆண்டுகள் பெருமை வாய்ந்தது. தமிழ்நாடு இந்து சமய அறநி... மேலும் பார்க்க

முத்தூரில் சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், தலைமைக் காவலா் கோபிநாத் ஆகியோா் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் தா்னா

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் அரிசிக்கடை வீதியில் உள்ள இந்து சமய அறநில... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க