மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2025-ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. செம்மொழியின் சிறப்பையும், கருணாநிதியின் தமிழ்த் தொண்டின் பெருமையையும் மாணவா்களிடம் உணா்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி செம்மொழி நாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மே 10-ஆம் தேதியும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழ் வளா்ச்சித் துறையின் இணைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருப்பூா் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் பின்னா் பள்ளி மாணவா்கள் தலைமை ஆசிரியா் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவா்கள் முதல்வா் அல்லது துறைத் தலைவா் பரிந்துரைக் கடிதத்துடனும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 93614-61882, 87606-06234 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.