செய்திகள் :

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

post image

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் நாடாறுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வேலூா் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 ஹிந்து குடும்பங்களின் பூா்வீக சொத்துகள் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தம் என்றும், அவா்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அநீதியை எதிா்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஊா் ஊராக ஆா்ப்பாட்டம் நடத்துகிறாா்கள். ஆனால், வேலூா் இறைவங்காடு கிராமத்து அப்பாவி ஹிந்துக்களின் சொத்தின் உரிமையைப் பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது, மதமாற்றத்தால் ஹிந்துக்களின் குடும்பங்களை சீரழிப்பது, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது போன்ற செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைபோகின்றனா்.

திருச்செந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமையான சிவன்கோயில் மற்றும் பலநூறு ஏக்கா் ஹிந்துக்களின் பரம்பரை சொத்துகள் வக்ஃப் வாரிய சொத்து என்று சொந்தம் கொண்டாடியது. அதேபோல, திருப்பூா் மாவட்டம் மங்கலம், திருவல்லிக்கேணி என பல இடங்களில் ஹிந்துக்களின் சொத்துகளை வக்ஃப் வாரிய சொத்து என்று அந்த வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணா்வால் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு புதிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே, ஹிந்துக்களின் பராம்பரிய சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க