செய்திகள் :

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

கர்நாடகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வானிலை ஆய்வு மைம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிதர் மாவட்டத்தின், அவுரத் தாலுகாவிலி இரவு முழுவதும் பெய்த மழையால் பால்கி தாலுகாவில் உள்ள படல்கான்-சோண்டிமுகேட்டில் உள்ள தாதகி பாலம் உள்பட பல பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அவுரத் தாலுகாவில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஒரு ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதர் துணை ஆணையர் ஷில்பா சர்மா பாதுகாப்பு நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த நிலையில், மங்களூரு, புத்தூர், முல்கி, மூட்பித்ரி, உல்லால் மற்றும் பன்ட்வால் தாலுகாக்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உள்பட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

தாழ்வான பகுதிகள், ஏரிகள், கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து குழந்தைகள் விலகி இருப்பதை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க எச்சரிக்கப்பட்டுள்ளது. நோடல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு பதிலளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் தாசில்தார்களும் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரு வானிலை ஆய்வு மையம், அடுத்த மூன்று மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசும். லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

தட்சிண கன்னடா, உடுப்பி, விஜயபுரா, பாகல்கோட், கலபுரகி மற்றும் பிதார் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக மின் தடைகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பலவீனமான மரக்கிளைகள் வேரோடு சாய்வதற்கு வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மின் சாதனங்களைத் துண்டிக்கவும், மரங்கள் அல்லது நீர்நிலைகளிலிருந்து பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மங்களூரு ஆந்திரத்தில் 106.6 மிமீ, கடக்கில் 70.1 மிமீ, பெங்களூரு எச்ஏஎல் ஏபியில் 28.2 மிமீ, சித்ரதுர்காவில் 14.8 மிமீ, கலபுரகியில் 10.4 மிமீ மற்றும் பெங்களூரு நகரில் 4.9 மிமீ மழை பெய்துள்ளது. அகும்பேயில் 108.5 மிமீ, விஜயபுராவில் உள்ள திடகுண்டியில் 46.5 மிமீ மற்றும் மங்களூருவில் 33 மிமீ என பதிவாகியுள்ளன. கர்நாடகா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய இடைவிடாத மழை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.

Heavy rains lashed several parts of Karnataka on Thursday morning, leading to the IMD issuing orange and yellow alerts in various districts, holiday for educational institutions and authorities taking precautionary measures across multiple districts.

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து ... மேலும் பார்க்க

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும்: கேஜரிவால்

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கேஜரிவால். பாஜக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் 55 வயதில் 17வது குழந்தை பெற்ற பெண்!

ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா - ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.17வது குழந்தையை, கவாரா - ர... மேலும் பார்க்க

மசோதாக்களை ஆளுநர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தருக்கிறது.சட்டப்பேரவைகளி... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஔரய்யா பகுதியில், மரத்திலிருந்து பணமழை கொட்டியதால், அங்கு பணத்தை எடுக்க மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், குரங்கு ஒன்று பணத்தை ம... மேலும் பார்க்க

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 ச... மேலும் பார்க்க