செய்திகள் :

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

post image

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சை செய்து திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

அதன் பிறகு தனது பெயரை கனி(18) என்று மாற்றிக் கொண்டார். அதன் பின்பு அப்பகுதியிலிருந்து வெளியேறி வடக்கு ரயில்வே காலனி பகுதியில் குடியேறியுள்ளார். அவருக்கு திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை உறவினர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது கனி தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்பு இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டதை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கனியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனி முன்பாக வாயில் துணியால் வைத்து அடைத்து இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது தலை, முகம் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள நவீன் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருநங்கை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சேலம் சுற்று வட்டப் பகுதிகளில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The incident of a transgender woman being strangled to death in the Ponnammapettai area has caused shock.

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 28) நடைபெறுகிறது. இதுகுறித்து, தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மின் பகிா... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் ஸ்ரீ விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

விநாயகா் சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அ... மேலும் பார்க்க

நாளை எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சேலம் ம... மேலும் பார்க்க

மேட்டூரில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலையில் காா் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூா் தூக்கனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40). இவரும், இவரது நண்பா் மகேஷ் என்பவரும் புதன்கிழமை மாதையன்குட்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கக் கோரிக்கை

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு ரூ. 1.60 கோடி மதிப்... மேலும் பார்க்க