செய்திகள் :

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

post image

மகாராஷ்டிரம் மாநிலம் பால்கர் மாவட்டத்தில், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரது எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

பால்கர் மாவட்டத்தின், விஜய் நகர் பகுதியில் அமைந்திருந்த சுமார் 50 வீடுகளுடன் கூடிய 4 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.26) நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஏராளமான படைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, இந்தச் சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தற்போது 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அந்தக் கட்டடத்தை கட்டிய நபரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

The death toll from the collapse of a part of a four-storey building in Palghar district of Maharashtra has risen to 17, it has been reported.

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.தேரதல் நடைபெறவிருக்கும் நில... மேலும் பார்க்க

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலகா கோரிக்கை விடுத்துள்ளார். இம்பாலில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரணியில் அவர் பேசினார்.... மேலும் பார்க்க

ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

ஹரியாணாவில் தகுதியான பெண்களுக்கு செப். 25 முதல் மாதந்தோறும் ரூ. 2100 உதவித்தொகை வழங்கப்படும் திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்தார்.மாநிலத்தில் ஆளும் பாஜக தனது முக்கிய... மேலும் பார்க்க

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து ... மேலும் பார்க்க

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும்: கேஜரிவால்

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கேஜரிவால். பாஜக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் 55 வயதில் 17வது குழந்தை பெற்ற பெண்!

ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா - ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.17வது குழந்தையை, கவாரா - ர... மேலும் பார்க்க