செய்திகள் :

தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடும் மக்கள்– புனோல் நகரில் நடக்கும் விழாவின் பின்னணி என்ன?

post image

ஸ்பெயின் நாட்டில் உள்ள புனோல் நகரில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 'லா டோமடினா’ (La Tomatina) என்னும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 27 அன்று தனது 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வருகின்றனர்.

இதில் டன் கணக்கான பழுத்த தக்காளிகள் ஒருவர் மீது ஒருவர் வீசப்படுகின்றன. இதன் விளைவாக, புனோல் நகரின் தெருக்கள் தக்காளி சாறால் நிரம்பி வழிகின்றன.

திருவிழாவின் நிகழ்வுகள்

லா டோமடினா திருவிழா பெரும்பாலும் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. புனோல் நகரின் மையப்பகுதியில் லாரிகள் மூலம் ஏராளமான தக்காளிகள் கொண்டு வரப்படுகின்றன. மரபுப்படி தக்காளி ஒருவர் மீது ஒருவர் வீசப்படுகிறது.

தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்த உணவுப் போர் முடிவடைகிறது. பின்னர், தீயணைப்பு வாகனங்கள் தெருக்களை தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்கின்றன. பங்கேற்பாளர்கள் அருகில் இருக்கும் ஆறுகளில் தங்களை சுத்தம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.

திருவிழாவின் நோக்கம் என்ன?

புனோல் நகரத்தில் உள்ளூர் மக்களின் கலாச்சார மரபாக 1945-ம் ஆண்டு தொடங்கிய இந்தத் திருவிழா உலகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. இதனால் புனோல் நகரின் புகழும், உள்ளூர் பொருளாதாரமும் வளர்வதாக தெரிவிக்கின்றனர்.

தக்காளி வீசும் இந்த உணவுப் போர், மக்களை ஒருவரோடு ஒருவர் விளையாட்டுத்தனமாக இணைத்து, மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியை உருவாக்குகிறது.எந்த மத அல்லது அரசியல் நோக்கமும் இல்லாமல், இந்தத் திருவிழா வெறுமனே மகிழ்ச்சியான கொண்டாட்டமாகவும், உலகளாவிய கலாச்சார நிகழ்வாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி: கொடியேற்றிய முதல்வர் ரங்கசாமி; சுதந்திர தின விழா கிளிக்ஸ்

புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச... மேலும் பார்க்க

மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நினைவூட்டிய பொய்கைக்கரை

பாரம்பர்ய நகரான மதுரை, தமிழகத்தின் அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கிய செயல்பாட்டுகளுக்கான மையமாகும். அவை மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகால தமிழர்களின் வரலாற்றையும், ஆட்சி செய்தர்களின் கதைகளையும் சுமந்து கொ... மேலும் பார்க்க

நீலகிரி: குறும்பர் பழங்குடி துவக்கி வைக்கும் படுகர் மக்களின் தெவ ஹப்பா திருவிழா! | Photo Album

பிறந்த குழந்தையை தெய்வத்தின் முன் வைத்து தலைமுறை வளரவேண்டும் என்பதற்காக கடவுளுக்குக் காணிக்கை செலுத்திய "மண்ட தண்டா" எனும் நிகழ்ச்சியுடன் "தெவ ஹப்பா" நேற்று துவங்கியது. இரண்டாம் நாளான இன்று குறும்பர் ... மேலும் பார்க்க