செய்திகள் :

மசோதாக்களை ஆளுநர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தருக்கிறது.

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி மாநில அரசுகளால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு, நீதித்துறை, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

இதன் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, பாஜக ஆளும் மாநில அரசுகள் சார்பில் வழக்குரைஞர்கள் வாதங்களை முன் வைத்து வந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசுகளால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை எனவும் மத்திய அரசிடம் நீதிபதிகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் நீதிமன்றம் உத்தரவிடுவது சரியானதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்கள், மாநில அரசு சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை எனில் மாநில அரசுகள் வழக்குத் தொடுக்க முடியாது என்றும், மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்கவில்லை என்று ஆளுநர்களிடம் காரணத்தை தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றங்கள் கேட்க முடியுமா என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த உள்ள நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து ... மேலும் பார்க்க

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும்: கேஜரிவால்

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கேஜரிவால். பாஜக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் 55 வயதில் 17வது குழந்தை பெற்ற பெண்!

ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா - ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.17வது குழந்தையை, கவாரா - ர... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

கர்நாடகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வானிலை ஆய்வு மைம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஔரய்யா பகுதியில், மரத்திலிருந்து பணமழை கொட்டியதால், அங்கு பணத்தை எடுக்க மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், குரங்கு ஒன்று பணத்தை ம... மேலும் பார்க்க

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 ச... மேலும் பார்க்க