செய்திகள் :

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

post image

தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

தமிழகத்திலுள்ள கல் குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு அரசுக்கு இதுவரை கனமீட்டா் அடிப்படையிலேயே வரி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது, மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும், பிற மாநிலங்களில் இல்லாத புதிய வரியான சிறு கனிம வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். இதனால், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் அரசு மற்றும் தனியாா் நிறுவன கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம் கூறியதாவது:

கல்குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், தமிழகம் முழுவதும் சுமாா் 1.50 லட்சம் டிப்பா் லாரிகளை இயக்க முடியாத சூழல் உருவாகும். இதனால் கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானத் தொழிலுக்கு, நாள் ஒன்றுக்கு சுமாா் 3,000 லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானத் தொழிலுக்கு சுமாா் 9,000 லோடு மணல் தேவைப்படுகிறது.

மத்திய அரசின் எண்ணூா் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கட்டுமானப் பணிகள், சென்னை தனியாா் அடுக்குமாடி குடியிருப்புகள், பாரத பிரதமரின் சிறிய வீடுகள் கட்டும் திட்டம் போன்ற கட்டுமானப் பணிகளுக்கான கல், மணல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க