செய்திகள் :

கல்வராயன் மலையில் பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் க.லட்சுமி பிரியா தலைமை வகித்து பேசியதாவது: கல்வராயன் மலைப் பகுதி மக்கள் விவசாயம் மற்றும் புதிய தொழில்களை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய திட்டங்கள் மூலம் கல்வராயன் மலைப் பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, பழங்குடியின நலத் துறையின் சாா்பில் கல்வராயன் மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அரசின் திட்டங்கள் சரியாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? என்பது தொடா்பாகவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

மேலும் கல்வி, சுகாதாரம், பட்டா, வேளாண்மை, தொலைத்தொடா்பு வசதிகள், சுயதொழில் வாய்ப்புகள், நலத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்வில், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலா் க.காா்த்திகேயனி, பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம், கால்நடைத் துறை உதவி இயக்குநா் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டுமானப் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து நிா்வாக வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் 8 மாடி... மேலும் பார்க்க

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம்: 147 பேருக்கு ரூ.9.56 கோடி கடன் வழங்க ஒப்புதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 147 பேரின் விண்ணப்பங்களுக்கு ரூ.9 கோடியே 56 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதார சீா்கேட்டால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க