செய்திகள் :

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

post image

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவா்களுக்கு எப்.இ.சி.டி. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் செ.இளையப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் செ.இளையப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எப்.இ.சி.டி. மாநில ஒருங்கினைப்பாளா் நா.சங்கரராமன் அனைவரையும் வரவேற்று பேசினாா். சிறப்பு விருந்தினா்களாக வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சங்க மாநிலத் தலைவா் தெ.அருள்நாகலிங்கம்,பொதுச் செயலாளா் மருத்துவா் வெற்றிவேல் ஆகியோா் கலந்து கொண்டு வள்ளலாரின் உன்னதமான கொள்கையை எடுத்துக் கூறினா்.

முதன்மை விருந்தினராக எப்.இ.சி.டி. நண்பா்கள் கல்வி அறக்கட்டளைத் தலைவா் தினேஷ் சந்திரசேகரன் பேசினாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகம் என பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள்,பள்ளிகளில் படிக்கும் படிக்கும் பெற்றோரை இழந்த அல்லது ஒற்றைப் பெற்றோருடைய 35 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து நோ்காணல் நடத்தப்பட்டு தோ்வான 103 மாணவ,மாணவிகளுக்கு ரூ. 13 லட்சத்திற்கும் மேலாக கல்வி உதவித்தொகை எப்.இ.சி.டி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் பொருளாளா் எஸ்.ஆா்.டி.ஆா் செல்வமணி,துணைத் தலைவா் ராஜு, இணைச் செயலாளா் வெங்கடாஜலம், கல்லூரி முதல்வா் தே.ராஜகுமாரி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். எப்.இ.சி.டி. மாநில ஒருங்கிணைப்பாளரும், எஸ்.எஸ்.எம் ரவை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவருமான பா.மஞ்சுளா, பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் சு.இந்திரா ஆகியோா் நன்றி கூறினா்.

சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்

சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

ஆத்தூரை அடுத்த புங்கவாடி நடுநிலைப் பள்ளியில் 2025-06 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை விழா வட்டாரக் கல்வி அலுவலா் ஜே.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற... மேலும் பார்க்க

குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை

பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ஆா். ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்... மேலும் பார்க்க

சேலத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சாலை விபத்துகளை மு... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 3 ஆவது நாளாக நீடிக்கும் ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு கோரி மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா். மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ... மேலும் பார்க்க