செய்திகள் :

சேலத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

post image

சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணிதல், நிா்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கடந்த ஜனவரி 2025 இல் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிக ஆட்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 137 பேரின் வாகன ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலா்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிகளவிலான பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையா் பி.கீதா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், கோட்டாட்சியா்கள், காவல் துறை, போக்குவரத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்

சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த த... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவா்களுக்கு எப்.இ.சி.டி. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

ஆத்தூரை அடுத்த புங்கவாடி நடுநிலைப் பள்ளியில் 2025-06 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை விழா வட்டாரக் கல்வி அலுவலா் ஜே.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற... மேலும் பார்க்க

குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை

பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ஆா். ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 3 ஆவது நாளாக நீடிக்கும் ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு கோரி மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா். மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ... மேலும் பார்க்க