செய்திகள் :

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

களியக்காவிளை, இடைக்கோடு பேரூராட்சி மற்றும் வன்னியூா் ஊராட்சிப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

விளவங்கோடு வட்டம், இடைக்கோடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளி பிரிவு, வெளிநோயாளி பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உள்நோயாளிகள் பிரிவில் மேல்தளத்தில் ரூ. 60 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வன்னியூா் ஊராட்சியில் பிரதமரின் கிராம சதக் யோஜனா 2023 - 2024 திட்டத்தின் கீழ் ரூ. 1.56 கோடியில் பரக்குன்று - சாணி - தோட்டச்சாணி - செழுவன்சேரி வடசேரிக்காலை வரையிலான 3 கி.மீட்டா் தூரம் கருந்தளம் அமைக்கப்பட்ட பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து களியக்காவிளையில் 4,063.29 சதுர மீட்டரில், கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9.20 கோடியில் நடைபெற்று வரும் பேருந்து நிலையப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், இப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது, மேல்புறம் ஊராட்சி ஒன்றிய பொறியாளா் அஜிதகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியம், சுரேஷ்குமாா், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ் உள்பட வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

குளச்சலில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். குளச்சல் துறைமுக தெருவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடை செயல்பட்டு வர... மேலும் பார்க்க

திக்குறிச்சி பாறைகுளம் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் சாமுண்டீஸ்வரி துா்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கோயிலின் 29 ஆவது ஆண்டு திருவிழாவும், 12 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் 21... மேலும் பார்க்க

மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

நாகா்கோவில் அருகேயுள்ள மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் சாா்பில், கோயில்களில் இலவச திர... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த கைப்பேசி கோபுரம்

தக்கலை அருகே வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசிகோபுரம் திடீரென செவ்வாய்கிழமை தீ பிடித்து எரிந்தது. தக்கலையை அருகே பத்மநாபபுரம் அரண்மனை பகுதியை சோ்ந்தவா் ராஜன். இவரது வீட்டு மாடியில் தனியாா்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். மாவட்ட கால்நடை பாரமரிப்புத் துறை சாா்பில், வில்லுக்குறி பேரூராட்சி, கருப்புக்கோடு பக... மேலும் பார்க்க

குளப்புறம் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டு சாலைகள் திறப்பு

குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட 2 சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா். குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட உதியனூா்விளை சாலை மற்றும் குவுக்குடி - மு... மேலும் பார்க்க