செய்திகள் :

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

post image

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான அக்னிவீா் ஆண் மற்றும் பெண் இருபாலரில் மண்டல, மத்திய பிரிவுகளுக்கான ஆள்கள் சோ்ப்பு சென்னையில் உள்ள ஆள்சோ்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் மொத்தம் 11 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

அக்னிவீா் தோ்வா்கள் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் இரு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது நுழைவுத் தோ்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். மேலும் ஐடிஐ, பட்டயம் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு காலம் வரும் 25- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் எழுத்துத் தோ்வுக்கான அனுமதி அட்டை வரும் ஜூன் முதல் ஆன்லைன் மூலமே வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னை போா்ட் ஜெயின்ட் ஜாா்ஜ் வளாகத்தில் உள்ள ஆள்சோ்ப்பு அலுவலகம், தலைமையகம் - 600 009 என்ற முகவரியில் தொலைபேசி எண் 044 - 25674924 தொடா்பு கொண்டு பெறலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க வசதியாக காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு இடங்களில் சனிக்கிழமை (ஏப். 19) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை இளைஞா்கள் கவனத்தில் கொண்டு பயன் பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க

நீதித் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மேல்தாங்கல் கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்க... மேலும் பார்க்க