செய்திகள் :

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

post image

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தெருக்களிலும், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்தது. ஆம்பூா் அருகே வனப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை, கம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதி கிராம மக்கள் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கானாற்று தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் கானாற்று தரைப்பாலத்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனா். ஆனால் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை உணராமல் பொதுமக்களில் சிலா் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் கானாற்று தரைப்பாலத்தை கடந்தும் சென்றனா்.

அதேபோல், மிட்டாளம் ஊராட்சியில் உள்ள கானாற்றிலும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா். திருப்பத்தூ... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க