செய்திகள் :

காரைக்கால் அம்மையாா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்

post image

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீசோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், ஸ்ரீஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 6.15 மணிக்கு ஐயனாா் கோயில் கும்பாபிஷேகமும், காலை 6.30 மணிக்கு அம்மையாா் குளத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நந்தி விமான கும்பாபிஷேகமும், காலை 7 மணிக்கு மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு சோமநாத சுவாமி, காரைக்கால் அம்மையாா் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

இதற்கான 6 கால யாகசாலை பூஜைக்கு அரசலாற்றிலிருந்து நீா் யாகசாலை மண்டபத்துக்கு வியாழக்கிழமை காலை கொண்டு செல்லப்பட்டது. மாலை 7 மணியளவில் முதல்கால பூஜைகள் தொடங்கின. கோயில்களின் ஒவ்வொரு விமானத்துக்கு ஒரு குண்டம் வீதம் யாகசாலையில் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்... மேலும் பார்க்க

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வெள்ளைசாற்றுடன் புதன்கிழமை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீதங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் ஏப். 27-ஆம்... மேலும் பார்க்க

வேளாண் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வேளாண் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விகி... மேலும் பார்க்க

காரைக்காலில் மே தினம் கொண்டாட்டம்

காரைக்காலில் பல்வேறு இடங்களில் மே தினம் கொடியேற்றியும், தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. காரைக்கால் மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவை... மேலும் பார்க்க