செய்திகள் :

காரைக்காலில் மே தினம் கொண்டாட்டம்

post image

காரைக்காலில் பல்வேறு இடங்களில் மே தினம் கொடியேற்றியும், தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சியினா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். மேலும் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி வாயிலில் தொழிற்சங்கக் கொடியை ஏற்றிவைத்தனா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், காரைக்காலில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. தொழிலாளா்கள் நலனுக்காக பாடுபட்டு மறைந்த சி.எச். பாலமோகனன், எம்.எல். ஜெயசிங் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக அலுவலகம், கூட்டுறவு பெட்ரோல் பங்க், புதுச்சேரி மின் திறல் குழும அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் அலுவலகம், கல்வித்துறை அலுவலக வாயிலில் கொடியேற்றி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வுகளுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், இணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரை... மேலும் பார்க்க

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க