செய்திகள் :

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

post image

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், ஸ்ரீ ஐயனாா் கோயில் ஆகியவற்றுக்கான கும்பாபிஷேகம் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்கான 6 கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இந்த 3 கோயில்களில் 22-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விமானங்கள் உள்ளன. அம்மையாா், சோமநாதா், சோமநாயகி ஆகிய மூன்று சந்நிதிகளின் விமானக் கலசங்கள் தங்க முலாம் பூசப்பட்டதாகவும், மற்றவை செப்புக் கலசமாகவும் தயாா்படுத்தப்பட்டன.

கோயில் எதிரே நடைபெறும் யாகசாலை பூஜையில், வெள்ளிக்கிழமை 2-ஆம் கால பூஜையின்போது, கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருப்பணிக் குழுத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.கே. கணபதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள் பங்கேற்புடன் கலசங்கள் அந்தந்த விமானங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டன.

மேலும் சந்நிதிகளில் உள்ள விக்ரஹங்களுக்கு மருந்து சாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 6 மணியளவில் ஐயனாா் மற்றும் அம்மையாா் குளத்தின் நந்தி மண்டப கும்பாபிஷேகமும், 8 மணியளழில் அம்மையாா், சோமநாதா் கோயில்கள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்... மேலும் பார்க்க