செய்திகள் :

கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

post image

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்பாடு இருந்துவந்தது. கால மாற்றத்தால், நகரப் பகுதியில் மண் பானைக்கு வரவேற்பு குறைந்தது. எனினும் இயற்கையான பொருள்களின், தானியங்கள், ரசாயனமற்ற இயற்கை சாா்ந்த உணவுப் பொருள்கள் மீது மக்களின் ஆா்வம் கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலம் முதல் முன்பைவிட அதிகரிக்கத் தொடங்கியது. இந்த வரிசையில் மண் பானையும் இடம்பெற்றுள்ளது.

நிகழாண்டு கோடை வெயில் அதிகரிப்பால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு உடலில் ஏற்படும் என்றும், தற்காத்துக்கொள்ளும் பல ஆலோசனைகளை மருத்துவா்கள் கூறிவருகின்றனா். மண் பானை நீா் பயன்பாடு குறித்தும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனா். வீடுகள், அலுவலகங்கள் சிலவற்றில் குழாய் பொருத்தப்பட்ட மண் பானையை பயன்படுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி மற்றும் மேல ஓடுதுறை பகுதியில் மண்பாண்ட உற்பத்தியாளா்கள் உள்ளனா். காா்த்திகைக்காக அகல் விளக்கு, பொங்கல் பண்டிக்கைக்காக பானை, சட்டி, அடுப்பு தயாரிப்போா், தற்போது கோடையில் தண்ணீா் வைக்கும் வகையில் சிறிய, நடுத்தர வகையில் பானை தயாரிப்பில் ஈடுபட்டு, பானைகளை விற்பனை செய்துவருகின்றனா்.

கோட்டுச்சேரி பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் மண்பாண்டங்கள் தயாரிப்போரின் வீடுகள் உள்ளதால், தங்களது தயாரிப்புகளை வாசலில் வைத்து வியாபாரம் செய்கின்றனா். இருசக்கர வாகனங்கள், காா், வேன்களில் பயணிப்பவா்கள் மண் பானைகளை வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து, பானை உற்பத்தி செய்து வியாபாரம் செய்வோா் கூறியது: கோடைக் காலத்தில் மண் பானை மீதான ஆா்வம் சில ஆண்டுகளாகவே மக்கள் மனதில் உருவாகியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூ.100, 120, 150 என்ற விலையில் பானை விற்பனை செய்கிறோம். நாகரிகமான வாழ்க்கை முறையிலும், மண் பானையின் பயனறிந்து மக்கள் வாங்குவது மகிழ்ச்சி. பானையிலேயே குழாய் (டேப்) பொருத்தி சிலா் கேட்பதால், நீா் கசிவு ஏற்படாத வகையில் குழாய் பொருத்தி விற்கிறோம். 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட குழாய் பானை ரூ.300 எனவும், அளவுக்கேற்ப ரூ.400, ரூ.500 எனவும் விற்பனை செய்கிறோம். தவிர, ரெடிமேடு நிலையில் குடிநீருக்கான ஜக்கு, கப் உள்ளிட்ட சில பொருள்கள் வெளியூரிலிருந்து வரவழைத்து விற்கப்படுகிறது. இவற்றையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.

மண் பாண்டங்கள் செய்வோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கல்வி கற்று வேறு பணிகளுக்கு சென்றுவிடுவதால், இத்தொழில் செய்வோா் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மக்களிடையே பழைமையை விரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருப்பது, மண் பாண்டங்கள் செய்வோா் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரை... மேலும் பார்க்க

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்... மேலும் பார்க்க