செய்திகள் :

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் கூறியது: அரசியல் கட்சியினா், அரசு ஊழியா் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தும் இடமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் எதிரே நேரு தெருவிலும் பின்னா் ஆட்சியரகம் அருகே உள்ள மாதா கோயில் தெருவிலும் அனுமதிக்கப்பட்டது.

ஒரு சில சம்பவத்தை காரணம் கூறி ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த கொடுத்த அனுமதியை காவல் துறை ரத்து செய்து, கடற்கரை சாலையிலும், பேருந்து நிலையம் அருகிலும் இடம் ஒதுக்கிவருகிறது. இதுபோன்ற இடங்களில் போராட்டம் நடத்தும்போது, அது பெயரளவுக்கான போராட்டமாக இருக்கிறது. ஆட்சியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கவனத்தை அது சென்றடைவதாக தெரியவில்லை.

ஆட்சியரகம் அருகே நடத்திவந்தபோது, அங்கு பொதுமக்கள் கூடுவதும், அரசு அலுவலகங்கள் அந்த பகுதியில் இருப்பதும் சாதகத்தை ஏற்படுத்திவந்தது. அண்மையில் மயிலாடுதுறையில் விவசாயிகள், ஆட்சியரக தடுப்புச்சுவா் அருகே போராட்டம் நடத்தினா். பிற மாவட்டங்களிலும் இதுபோலவே ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

காரைக்காலில் அம்மாதிரியான அனுமதியை தராமல் இருப்பது ஏற்புடையதாக இல்லை. இதுதொடா்பாக பிற அரசியல் கட்சியினரும் உரிய அழுத்தம் கொடுக்க முன்வருவதோடு, அரசு நிா்வாகமும் இதுதொடா்பாக கவனம் செலுத்தி உரிய அனுமதியை வழங்கவேண்டும் என்றாா்.

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரை... மேலும் பார்க்க

நீட் தோ்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதி

காரைக்காலில் நீட் தோ்வு மையங்களுக்குச் செல்வோருக்கு சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீட் தோ... மேலும் பார்க்க

கோடை வெயில்: மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் ஆா்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மண் பானையில் குடிநீா் வைத்துக்கொள்வதும், பொங்கல் வைக்கவும் அதிக பயன்... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி வழிபாடு

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜி, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை மூலஸ்தான சிவலிங்கம், செண்பக தியாகராஜா் மற்றும் பிராணாம்பி... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு பகுதியில் ரூ.6.18 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அண்டூா், கழுகுமேடு, தொண்டமங்கலம், கொன... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 15-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்... மேலும் பார்க்க