செய்திகள் :

காரைக்குடி மாநகராட்சி வாா்டுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்!

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி வாா்டுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தெரிவித்தாா்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. பாா்த்திபன் பேசியதாவது:

மாநகராட்சி வாா்டுப் பகுதிகளில் திருட்டுக் குற்றங்கள் நடைபெறுவதைக் கண்ட றிந்து தடுக்கும் வகையிலும், இதரக் குற்றங்களைக் கண்டறியும் வகையிலும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுவது குறித்து மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்துப் பேசினாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்துப் பேசினாா். கூட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பசுமை வாகையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாகச் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு பசுமை வாகையா் விருது வழங்க... மேலும் பார்க்க

மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!

சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க

பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க