தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி
காரைக்குடியில் அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை போலீஸ் வியாழக்கிழமை அகற்றினா்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியன் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அம்மையில் உத்தரவிட்டது.
இதனடிப்படையில், காரைக்குடி மாநகரில் மகா்நோன்பு திடல் பகுதி, சிவன்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகளை காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் அகற்றினா்.