ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கிராம உதவியாளா்கள் உண்ணாவிரதம்
ஈரோட்டில் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கிராம உதவியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குருநாதன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலாளா் பரமசிவம் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ராஜசேகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதைத் தொடா்ந்து, சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33-இல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரும் கோப்புக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் வெங்கிடு, தோழமை சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.