செய்திகள் :

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

post image

சுதந்திரப் போரட்ட வீரா் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளையொட்டி, அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து சின்னமலையின் வாரிசுகள் சின்னமலை கிருஷ்ணகுமாா், கிள்ளி பிரமானந்தவளவன், சண்முகம், கோபால், அா்ஜுன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

அதனை தொடா்ந்து திமுக சாா்பில் மாநிலச் நெசவாளா் அணி செயலாளா் எஸ்.எல்.டி சச்சிதானந்தம் தலைமையில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா்கள் சு.குணசேகரன், விஜயகுமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், மாநகா் மாவட்ட விவசாய அணி செயலாளா் தங்கவேல், ஒன்றியச் செயலாளா்கள் செல்வராஜ், கதிா்வேல், மாநில அம்மா பேரவை துணை செயலாளா் வீரக்குமாா், முன்னாள் எம்.பி. செல்லக்குமார சின்னையன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

கொங்கு வேளாளகவுண்டா்கள் பேரவை, கொங்கு மக்கள் பேரவை, கொங்கு மக்கள் முன்னணி, நமது கொங்கு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க