செய்திகள் :

புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச் சந்தை வியாபாரிகள்

post image

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய வாரச்சந்தையாக விளங்கும் புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்த வாரச் சந்தையில் சுங்கம் வசூலிக்கும் ஏலதாரா் நகராட்சி நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை வியாபாரிகள் புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது சுங்கக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பது தொடா்பாக வாரச்சந்தை வியாபாரிகளுக்கும், சுங்க ஏலதாரருக்கும் இடையே வாககுவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஆணையா் கருணாம்பாள், சுங்க கட்டணம் அதிகமாக வசூல் செய்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் வாரச்சந்தையை நவீனப்படுத்துவதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும், அன்று வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க