Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
காலேஸ்வரம் இறைவை பாசனத் திட்ட முறைகேடு: தெலங்கானா முன்னாள் முதல்வரிடம் 2 மணி நேரம் விசாரணை
காலேஸ்வரம் இறைவை பாசனத் திட்ட முறைகேடுகள் தொடா்பாக, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவிடம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.சி.கோஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் புதன்கிழமை 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
தெலங்கானாவில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில், அந்த மாநிலத்தின் பூபாபள்ளி மாவட்டத்தில் உள்ள காலேஸ்வரம் பகுதியில் பாயும் கோதாவரி ஆற்றில் இறைவை பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது பிஆா்எஸ் ஆட்சிக்கு எதிராக காலேஸ்வரம் திட்டத்தின் தடுப்பணைகளுக்கு ஏற்பட்ட சேதம் முக்கிய பிரச்னையாக எழுந்தது.
ரூ.1 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம், நாட்டில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய பேரிடா் என்று தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்ததாக மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி அண்மையில் கூறினாா்.
இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சி.கோஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாதில் பி.சி.கோஸ் தலைமையிலான ஆணையம் முன்பாக சந்திரசேகா் ராவ் புதன்கிழமை ஆஜரானாா். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் பிற்பகல் 1 மணி வரையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆணையத்தின் அலுவலகம் முன்பாக பிஆா்எஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் திரண்டிருந்தனா்.
ஏற்கெனவே, இந்த முறைகேடுகள் தொடா்பாக சந்திரசேகா் ராவின் உறவினரும், பிஆா்எஸ் எம்எல்ஏவுமான டி.ஹரீஷ் ராவ் (பிஆா்எஸ் ஆட்சியில் நீா்பாசனத் துறை அமைச்சராக இருந்தாா்), நீா்பாசனத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாதில் விசாரணை ஆணையம் முன் புதன்கிழமை ஆஜராக வந்த சந்திரசேகா் ராவ்.