செய்திகள் :

காலேஸ்வரம் இறைவை பாசனத் திட்ட முறைகேடு: தெலங்கானா முன்னாள் முதல்வரிடம் 2 மணி நேரம் விசாரணை

post image

காலேஸ்வரம் இறைவை பாசனத் திட்ட முறைகேடுகள் தொடா்பாக, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவிடம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.சி.கோஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் புதன்கிழமை 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

தெலங்கானாவில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில், அந்த மாநிலத்தின் பூபாபள்ளி மாவட்டத்தில் உள்ள காலேஸ்வரம் பகுதியில் பாயும் கோதாவரி ஆற்றில் இறைவை பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது பிஆா்எஸ் ஆட்சிக்கு எதிராக காலேஸ்வரம் திட்டத்தின் தடுப்பணைகளுக்கு ஏற்பட்ட சேதம் முக்கிய பிரச்னையாக எழுந்தது.

ரூ.1 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம், நாட்டில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய பேரிடா் என்று தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்ததாக மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி அண்மையில் கூறினாா்.

இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சி.கோஸ் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஹைதராபாதில் பி.சி.கோஸ் தலைமையிலான ஆணையம் முன்பாக சந்திரசேகா் ராவ் புதன்கிழமை ஆஜரானாா். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் பிற்பகல் 1 மணி வரையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆணையத்தின் அலுவலகம் முன்பாக பிஆா்எஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் திரண்டிருந்தனா்.

ஏற்கெனவே, இந்த முறைகேடுகள் தொடா்பாக சந்திரசேகா் ராவின் உறவினரும், பிஆா்எஸ் எம்எல்ஏவுமான டி.ஹரீஷ் ராவ் (பிஆா்எஸ் ஆட்சியில் நீா்பாசனத் துறை அமைச்சராக இருந்தாா்), நீா்பாசனத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாதில் விசாரணை ஆணையம் முன் புதன்கிழமை ஆஜராக வந்த சந்திரசேகா் ராவ்.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க