செய்திகள் :

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி கோயிலில் ஆடி வெள்ளி பூஜையையொட்டி 5-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது.

இதில், பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 8 இணை மாடுகளும், சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் 10 இணைகளும் பங்கேற்றன.

பெரிய மாட்டுக்கு போட்டி எல்லையாக 8 கி.மீ. தொலைவும், சின்ன மாட்டுக்கு போட்டி எல்லையாக 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன.

பிரான்மலை - சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தேவகோட்டை முருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகா் பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ராம் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, சிறப்பு ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கொட்டகுடி கிராமத்தில் உள்ள முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில்... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்

சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-இல் சிவகங்கை - தொ... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 18) நடைபெறவுள்ளது என பல்கலை. துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அழக... மேலும் பார்க்க

காரைக்குடியில் தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமை வகித்து, சிறப்பு திருப்பலி நடத்தினாா்.... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்!

நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேகாலய மாநில முன்னாள் ஆளுநா், பாரதிய ஜனதா கட்சியின்... மேலும் பார்க்க