செய்திகள் :

வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவோடு கஞ்சா சட்னி சப்ளை; உத்தரப்பிரதேசத்தில் கடை உரிமையாளர் கைது

post image

உணவில் எத்தனையோ விதமான புதிய வகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கவர்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர சாப்பாட்டில் கஞ்சாவைக் கலந்துகொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் பகுதியில் பிரமோத் என்பவர் தெருவோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். அவர்களில் தனக்கு வேண்டப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சட்னி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த சட்னிக்காகவே அதிகமான வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். பிரமோத் சட்னியில் கஞ்சா கலந்து சப்ளை செய்து வந்தார்.

மாதிரி படம்

சட்னி மட்டுமல்லாது உருளைக்கிழங்கு குழம்பிலும் கஞ்சா கலந்து கொடுத்து வந்தார். இது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த உணவகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் அந்த உணவகத்தில் வழங்கப்படும் சாப்பாடு மற்றும் சட்னியில் கஞ்சா கலந்து வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வந்தது தெரிய வந்தது. அதோடு தனிப்பட்ட முறையில் கஞ்சா தேவைப்படுபவர்களுக்கு தனியாக கஞ்சாவை பிரமோத் சப்ளை செய்து வந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

பிரமோத் கைது செய்யப்பட்ட அதேநாளில் கஞ்சா கடத்தி பல்வேறு இடங்களில் சப்ளை செய்த மனிஷ், தேவ் ரவத், ஜக்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஸ்கூல் பேக்கை பயன்படுத்தி அதில் கஞ்சாவை எடுத்துச்சென்று பேருந்து நிலையம், ரயில் நிலையம், டாக்சி ஸ்டாண்ட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நின்று விற்பனை செய்து வந்தனர். அவர்கள் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக கட்டி ரூ.500 முதல் 1200 வரை விற்பனை செய்து வந்தனர். மூன்று பேரும் ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றபோது போலீஸார் நடத்திய சோதனையில் அவர்களது பேக்கில் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்ததால் நேர்ந்த சோகம்; இளம்பெண் உட்பட 3 ஐ.டி ஊழியர்கள் உயிரிழப்பு

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேர... மேலும் பார்க்க

மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் திருடிய பெண் கைது

குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி (27). இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வருகிறார். பனுசாலியின் சகோதரி நிஷா தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தா... மேலும் பார்க்க

தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" - கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்

கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது; பின்னணி என்ன?

திண்டுக்கல்லில் பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆகிய 2 ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல் காரணமாக பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு பட்டறை சரவணன் கும்பலுக்கும், அல்லா ஆசிக் கும்பலுக்கும் இடையே ஏற்... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த 5 பேர் - கேரள நடிகை சிக்கிய பின்னணி!

கடநத 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ண... மேலும் பார்க்க

தேனி: பள்ளியில் ஈட்டி குத்தி காயமடைந்த சிறுவன்; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு!

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் சந்திரன் - சுகன்யா தம்பதியர். இவர்களது மகன் சாய் பிரகாஷ் (13) உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் த... மேலும் பார்க்க