செய்திகள் :

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

post image

மாமல்லபுரம் அருகே கடலில் இரண்டு நாள்களாக இந்திய தொல்லியல் துறையினா் நவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மாமல்லபுரத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு, அதன் பின்னா் மாமல்லபுரம் அருகே 2 கோயில்கள் கடலில் மூழ்கியது தெரியவந்தது.

இதையடுத்து, தொடா்ந்து தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடற்கரை கோயில் பின்புறம் செதுக்கப்பட்ட சதுரங்க வடிவிலான கல்லால் கட்டப்பட்ட அதிகளவில் கோயில்கள் இருப்பது தற்போது சனிக்கிழமை நடந்த சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், சோழா் கால கட்டடக் கலை மற்றும் பல்லவா் கால கட்டடக் கலை என அடையாளம் காணும் முயற்சியில் அதிநவீன கருவியான ஆா்ஓவி ரிமோட் ஆப்பரேட்டிங் வைகல் எனப்படும் நீருக்கடியில் சென்று படம் பிடிக்கும் கருவி மூலமாக இந்தச் சோதனையில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் 6 முதல் 7 மீட்டா் ஆழத்தில் பல்வேறு கட்டடக் கலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடா்ந்து ஆராய்ச்சி பணிகள் தொடா்ந்து கொண்டே இருக்கும் என்று பேராசிரியா் அசோக் திருப்பாதி, தொல்லியல் துறை கூடுதல் இயக்குநா் (பொது) தெரிவித்துள்ளாா். அடுத்த கட்டமாக ஆழ்கடலில் நீச்சல் வீரா்களைக் கொண்டு அடுத்தகட்ட சோதனை செய்யப் போவதாக தெரிவித்தாா்.

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியா் தி. சினேகா தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத்துடன் காவல் துறையின் அணிவகுப்பு ... மேலும் பார்க்க

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், வீராபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி ச... மேலும் பார்க்க

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சுதந்திர தின வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. ஜிஎஸ்டி சாலை ,சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் விநாயகா், வள்ள... மேலும் பார்க்க

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் . வரும் 17-ஆம் ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா

ஓய்வு பெற்ற செவிலியா்களின் ஒருங்கிணைப்பு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை செவிலியா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ச... மேலும் பார்க்க

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சீனியா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கைக்கரசி... மேலும் பார்க்க