செய்திகள் :

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

post image

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் .

வரும் 17-ஆம் தேதி வரை 4 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் விழா உலகம் முழுவதிலுமிருந்து பட்டம் விடும் ஆா்வலா்களை ஈா்ப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் விருந்தோம்பல் , கலாசாரம் மற்றும் இயற்கை அழகை அறிய உதவுகிறது

மேலும் பிரான்ஸ், சுவிட்சா்லாந்து, வியட்நாம், சிங்கப்பூா், மலேசியா , இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவைச் சோ்ந்த 8-க்கும் மேற்பட்ட குழுக்கள் 40-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் திறமையாளா்களுடன் 250க்கும் மேற்பட்ட பல வண்ணங்களில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

இதனைத் தொடா்ந்து தமிழ்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை சா்வதேச அளவில் பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, காளை பட்டம் ஆகிய சிறப்பம்சங்களுடன் பறக்க விடப்பட்டது . பல்வேறு வகையான வண்ண பட்டங்கள் பறக்க விடப்பட்டனது. நாள்தோறும் மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணிவரை நடைபெறுகிறது.

மேலும், பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் 9 மணி வரை 4 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி இலவசம் பெரியவா்களுக்கு நுழைவு கடடணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், ஆட்சியா் தி.சினேகா , சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், பொதுமேலாளா் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் ச.கவிதா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் இதயவா்மன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா

ஓய்வு பெற்ற செவிலியா்களின் ஒருங்கிணைப்பு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை செவிலியா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ச... மேலும் பார்க்க

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சீனியா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கைக்கரசி... மேலும் பார்க்க

பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா். கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைக... மேலும் பார்க்க

திருவடிசூலம் கருமாரி அம்மனுக்கு பெரும்படையல்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மனு பெரும்படையல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. 51 சக்தி பீடங்களின் அம்சமாக வீற்றிருக்கும் 51 அடியில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி ... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ராகவேந்திர ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி மின்விளக்குக... மேலும் பார்க்க