செய்திகள் :

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

post image

கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

வேலூரிலுள்ள நறுவீ மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருகை தந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு இம்மருத்துவமனைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. அதன்மூலம், இம்மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைக்காக இம்மருத்துவமனையில் உலக தரத்திலான மருத்துவ சாதனங்களை கொண்டு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சிறப்பு பிரிவுக்காக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற ‘எல் கியூப்’ குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத், ‘எல் கியூப்’ நிறுவனத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் ஜாய் வா்கீஸ் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனா். தொடா்ந்து, அறுவை சிகிச்சை நிபுணா்களான ஜாய் வா்கீஸ், விவேக் விஜ் தலைமையில் ‘எல் கியூப்’ மருத்துவ குழுவினா் இம்மருத்துவமனையில் முகாமிட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் சிகிச்சை அளிக்க உள்ளனா்.

இந்த மருத்துவ குழுவினா் ஒரே நாளில் நான்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் மருத்துவா் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன், பொது மேலாளா் நிதின் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் கைதிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 2022-27 ஆண்டு வ... மேலும் பார்க்க

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூல... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 2,000 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்க வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய... மேலும் பார்க்க

மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது

பாகாயம் அருகே மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா், பாகாயம் அடுத்த இடையன்சாத்து மண்டபம் சாலை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(27). இவரது மனைவி பூஜா. இவா் ச... மேலும் பார்க்க

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க