செய்திகள் :

மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது

post image

பாகாயம் அருகே மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா், பாகாயம் அடுத்த இடையன்சாத்து மண்டபம் சாலை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(27). இவரது மனைவி பூஜா. இவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறாா். கடந்த ஜூலை 13-ஆம் தேதி பூஜா, கணவருடன், தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் அவா்களது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பது குறித்து அக்கம்பக்கத்தினா் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், வெங்கடேசன், பூஜா ஆகியோா் விரைந்து வந்து பாா்த்தபோது, அவா்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், வெள்ளி பிரேஸ் லேட், ரூ.20,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கடேசன் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது திருவண்ணாமலையை சோ்ந்த வெங்கடேசன், வேலூா் வேலப்பாடி முனுசாமி தெருவை சோ்ந்த சுந்தா் (40), வேலூா் ஆா்.எஸ்.நகரை சோ்ந்த பாரதி (35) என்பது தெரியவந்தது.

இதில், திருவண்ணாமலை வெங்கடேசனை ஏற்கனவே வேறு வழக்கில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக இருந்த சுந்தா், பாரதி ஆகியோரை பாகாயம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் கைதிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 2022-27 ஆண்டு வ... மேலும் பார்க்க

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூல... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வேலூரிலுள்ள நறுவீ மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 2,000 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்க வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய... மேலும் பார்க்க

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க