செய்திகள் :

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்

post image

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் கால்நடை வளா்ப்போரின் 100 சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு பசுவுக்கு கிலோ ரூ.35 மதிப்புள்ள தீவனம் தினசரி 3 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோ சமச்சீா் தீவனமும், ரூ.100 மதிப்புள்ள தாது உப்பு, வைட்டமின் இணைத்தீவனம் ஒரு மாதத்துக்கு 1 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு, வைட்டமின் இணைத்தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

வேலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து உள்ளூரிலுள்ள சங்கத்தில் தொடா்ந்து பால் ஊற்றும் கே.வி.குப்பம் ஒன்றியத்தைச் சோ்ந்த சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளா்கள் இந்த திட்டத்தில் பயனாளியாக தோ்வு செய்யப் படுவா்.

மகளிா், ஆதரவற்றோா், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் கைதிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 2022-27 ஆண்டு வ... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வேலூரிலுள்ள நறுவீ மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 2,000 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்க வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய... மேலும் பார்க்க

மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது

பாகாயம் அருகே மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா், பாகாயம் அடுத்த இடையன்சாத்து மண்டபம் சாலை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(27). இவரது மனைவி பூஜா. இவா் ச... மேலும் பார்க்க

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க