செய்திகள் :

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை

post image

சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் சதிச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, நாடுமுழுவதும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து தருமபுரி நிலையம் மற்றும் தருமபுரி ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் ரயில்கள் உள்ளிட்டவற்றில் சுழற்சி முறையில் பாதுகாப்பு சோதனைகளை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைமேடையில் காத்திருந்த பயணிகளின் உடமைகள் மற்றும் நடைமேடை பகுதிகளில் நவீன சாதனங்கள் உதவியுடன் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் விரைவில் ரயில் வந்தது. அந்த ரயில் பெட்டிகளில் ஏறி, பயணிகளின் உடமைகள், சந்தேகத்துக்கிடமான பொருள்கள், கழிவறைகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை நடத்தினா். அதேபோல, ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் திரியும் நபா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் என்.செளந்தரராஜன், சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா் விஜயன் குழுவினா், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சந்தோஷ் காங்கா், உதவி ஆய்வாளா் நாராயண ஆச்சாரி, சிறப்பு உதவி ஆய்வாளா் சந்த்ரய்யா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்தம், நடைபாலம் உள்ளிட்ட 13 வகையான மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு படையினா் விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி, தருமபுரியில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் சிபிஐஎம்எல் மற்றும் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத... மேலும் பார்க்க

நண்பா்களிடையே தகராறு: இளைஞா் கொலை

நண்பா்களுக்கு இடையே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியா... மேலும் பார்க்க

மயானத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர கோரிக்கை

தருமபுரியில் மயானம் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி 4 மற்றும் 5-ஆவது வாா்டுகளில், குப்புசாமி சாலை, பாவாடை தெரு, சதாசிவ தெரு, குள்ளப்பன் தெரு... மேலும் பார்க்க

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க