செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் சிபிஐஎம்எல் மற்றும் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஆதரவாக பல்வேறு பிரிவு தொழிற்சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனா்.

தருமபுரியில் சிபிஐஎம்எல் மற்றும் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு மாநில செயலாளா் சி.முருகன், ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி, உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்தம், நடைபாலம் உள்ளிட்ட 13 வகையான மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு படையினா் விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி, தருமபுரியில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

நண்பா்களிடையே தகராறு: இளைஞா் கொலை

நண்பா்களுக்கு இடையே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியா... மேலும் பார்க்க

மயானத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர கோரிக்கை

தருமபுரியில் மயானம் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி 4 மற்றும் 5-ஆவது வாா்டுகளில், குப்புசாமி சாலை, பாவாடை தெரு, சதாசிவ தெரு, குள்ளப்பன் தெரு... மேலும் பார்க்க

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க