செய்திகள் :

79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது" - மோடி!

post image

"78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது" - மோடி

"சுதந்திர தினம் என்பது நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் திருவிழா. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்தன. சவால்களும் பெரியவை. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது. 79-வது சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. இன்று சிறப்பு வாய்ந்த நாள் ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் இன்று கொண்டாடுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்பிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் பெரிய மனிதர் அவர். பிரிவு 370 நீக்கியதன் மூலம், ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை உணர்ந்தபோது டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்."

செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதையை செலுத்திய பிரதமர் மோடி, அதைத்தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், உரையாற்றத் தொடங்கினார்.

"நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம்" - பிரதமர் மோடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

Thirumavalavan: "சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம்" - வி.சி.க முன்வைக்கும் தீர்வு!

சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் கலைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவரும் சூழலில் "தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்... மேலும் பார்க்க

``உறுப்பினர் சேர்க்க `ஓரணியில் தமிழ்நாடு’ என பிச்சை எடுக்கிறார்கள்’’ - விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (14-8-2025) மாலை, `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண... மேலும் பார்க்க

ஆளுநர்: "தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன" - அடுக்கடுக்காக விமர்சித்த ஆர்.என்.ரவி!

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாட்டு நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தைப் பு... மேலும் பார்க்க

Seeman: "காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..!" - கொந்தளித்த சீமான்

சென்னையில் ரிப்பன் மாளிகை முன்னால் 13 நாட்களுக்கும் மேலாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நேற்றிரவு (ஆகஸ்ட் 13) 'அப்புறப்படுத்தியிருக்கிறது' காவல்துறை.தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கையாண்ட விதத்துக்காக ... மேலும் பார்க்க

"வாக்குறுதி கொடுத்திருந்தாலும் இல்லையென்றாலும் பணி நிரந்தரம் வேண்டும்; தனியார்மயம் கூடாது!" - திருமா

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு வலுக்கட்டாயமா... மேலும் பார்க்க

'நீரோ மன்னனே..!'- முதல்வர் 'கூலி' பார்க்கையில் ரிப்பன் மாளிகையில் என்ன நடந்தது தெரியுமா?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட போது, ரோம் நகரம் பற்றி எறியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல முதல்வர் ஸ்டாலின் படம் பார்த்து மக... மேலும் பார்க்க