செய்திகள் :

திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல்லில் பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆகிய 2 ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல் காரணமாக பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு பட்டறை சரவணன் கும்பலுக்கும், அல்லா ஆசிக் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத் தொடர் கொலைகள் நடைபெற்றன.

மேலும், ரவுடிகளுக்கிடையே மோதல் காரணமாகத் தொடர் கொலைகளைத் தடுப்பதற்காக ஏற்கனவே, கொலை செய்யப்பட்ட பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆதரவாளர்களைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களது கண்காணிப்பில் வைத்து கண்காணித்து வந்தனர்.

யோகேஷ்வரன்
யோகேஷ்வரன்

இந்த நிலையில், திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் (25) என்ற இளைஞர், பட்டறை சரவணன் புகைப்படங்களை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. உடனடியாக காவல்துறையினர் வீடியோ பதிவிட்ட யோகேஸ்வரனை வன்முறையைத் தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட குற்றத்திற்காகக் கைது செய்தனர்.

மேலும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் மேலும், இதுபோன்று இளைஞர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக் கூடாது என்பதற்காக யோகேஸ்வரனை வைத்து, 'இனி இது போன்ற வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய மாட்டேன்' எனக் கூறும் மற்றொரு வீடியோ ஒன்றை காவல்துறையினர் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் திருடிய பெண் கைது

குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி (27). இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வருகிறார். பனுசாலியின் சகோதரி நிஷா தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தா... மேலும் பார்க்க

தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" - கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்

கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த 5 பேர் - கேரள நடிகை சிக்கிய பின்னணி!

கடநத 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ண... மேலும் பார்க்க

தேனி: பள்ளியில் ஈட்டி குத்தி காயமடைந்த சிறுவன்; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு!

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் சந்திரன் - சுகன்யா தம்பதியர். இவர்களது மகன் சாய் பிரகாஷ் (13) உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் த... மேலும் பார்க்க

சென்னை: கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - சிறைக்கு சென்ற பின்னணி

சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா (42). இவரின் மனைவி நிலவர் நிஷா. கடந்த 10.04.2025-ம் தேதி அதிகாலை காதர் பாஷா தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துவழிவிட்டான் என்பவரின் வீட்டு... மேலும் பார்க்க

சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!

சென்னை, அபிராமபுரம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் யாசகம் செய்து வந்தவர் சேகர் (57). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 07.08.2025-ம் தேதி இரவு விசாலாட்சி தோட்டம் பகுதியில் சேகர் நின்றுக் கொண்டிருந்தார். ... மேலும் பார்க்க