செய்திகள் :

பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

post image

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,

“நாட்டு மக்கள் அனைவருக்கு இதயப்பூர்வமான சுதந்திர நாள் வாழ்த்துகள். தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் மூலம் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

உண்மை மற்றும் சமத்துவத்தின் அடித்தளத்தில் நீதி தங்கியிருக்கும் ஒரு இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாடாக சுதந்திர நாள் இருக்கிறது. ஒவ்வொருவரின் இதயமும் சகோதரத்துவம் மற்றும் மரியாதையால் நிறைந்திருக்கிறது.

ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பங்கேற்காமல் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புறக்கணித்திருந்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் அலுவலகத்தில் கொட்டும் மழையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற்றிய நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Rahul Gandhi wishes the nation on Independence Day

இதையும் படிக்க : செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் சுதந்திர தினத்தில், புது தில்லியில் உள்ள ச... மேலும் பார்க்க

வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த ... மேலும் பார்க்க

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.இதனிடையே, தில்ல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசியத் தல... மேலும் பார்க்க