செய்திகள் :

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

post image

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தில், புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய மக்களால் தயாரிக்கப்பட்ட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் சந்தைக்கு வரும் என்று மோடி கூறினார்.

செல்போன் முதல் கணினி வரை, வீட்டு உபயோகப் பொருள் முதல், மின்னணு வாகனங்கள் வரை எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும், அதன் அடிப்படைத் தேவையாக இருப்பது செமிகண்டக்டர்கள்தான்.

நாட்டில் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை 50-60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, ஆனால் அது கோப்புகளிலேயே சிக்கிக் கொண்டது, அதே நேரத்தில் பல நாடுகள் அதில் தேர்ச்சி பெற்று உலகை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. செமிகண்டக்டர் உற்பத்தி என்பது 50-60 ஆண்டுகளுக்கு முன்பே கருக்கொலை செய்யப்பட்டுவிட்டது. அதனால் நாம் 50-60 ஆண்டுகளை இழந்துவிட்டோம்.

நமக்குப் பிறகு, செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்த பல நாடுகள், இன்று தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று தங்கள் சக்தியை வெளி உலகுக்கு நிரூபித்துவிட்டன. எந்தவொரு முன்னாள் அரசையும் விமர்சிக்க நான் செங்கோட்டையில் இல்லை, ஆனால் இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என்று பிரதமர் கூறினார்.

First made-in-India semiconductor chip will be launched in the market by the end of this year, Prime Minister Narendra Modi said on Friday.

இதையும் படிக்க... வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தேசியத் தலைநகா் தில்லியில் ... மேலும் பார்க்க

வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த ... மேலும் பார்க்க

பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக்... மேலும் பார்க்க

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.இதனிடையே, தில்ல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க