செய்திகள் :

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

post image

தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பற்றி பேசினார். அவர் மொத்தமாக 103 நிமிடங்கள் இன்று உரையாற்றினார். இது பிரதமர் மோடியின் நீண்ட உரையாகும். மோடி, கடந்த 2014-ல் 98 நிமிடங்கள் 2016ல் 96 நிமிடங்கள் பேசியிருந்தார். இன்றைய உரையின் மூலமாக பிரதமர் மோடி, அவரது சாதனையையே முறியடித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

அதிகபட்சமாக இந்தியாவில் 17 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமை ஜவாஹர்லால் நேருவைச் சேரும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு 72 நிமிடங்கள் நீண்ட உரையாற்றினார். 2015 ஆம் ஆண்டு 88 நிமிடங்கள் உரையாற்றி நேருவின் சாதனையை முறியடித்தார் பிரதமர் மோடி.

PM Modi delivers longest speech of 103 minutes; surpasses Indira Gandhi’s record for most consecutive I-Day addresses

இதையும் படிக்க | செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் சுதந்திர தினத்தில், புது தில்லியில் உள்ள ச... மேலும் பார்க்க

வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த ... மேலும் பார்க்க

பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக்... மேலும் பார்க்க

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.இதனிடையே, தில்ல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க