செய்திகள் :

சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!

post image

சென்னை, அபிராமபுரம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் யாசகம் செய்து வந்தவர் சேகர் (57). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 07.08.2025-ம் தேதி இரவு விசாலாட்சி தோட்டம் பகுதியில் சேகர் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை மனோஜ் (எ) நந்திகா (எ) ஜெசிகா என்பவர் அங்கு வந்திருக்கிறார். திருநங்கை ஜெசிகாவை சேகர் தொட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் திருநங்கை ஜெசிகா, முதியவர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஆத்திமடைந்த ஜெசிகா, முதியவர் சேகரை கீழே தள்ளி விட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஜெசிகா சென்றுவிட்டார். கீழே விழுந்த சேகர், உயிருக்கு போராடியிருக்கிறார்.

திருநங்கை ஜெசிகா

அதனால் அவரை மீட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் 11- ம் தேதி உயிரிழந்தார். சேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேகரிடம் போலீஸார் விசாரித்தபோது திருநங்கை ஜெசிகா, தள்ளிவிட்ட தகவலை அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் ஜெசிகா மீது கொலை வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் கூறுகையில், ``கைதான ஜெசிகாவிடம் விசாரித்தோம். அப்போது அவர், முதியவர் சேகர், சம்பவத்தன்று மதுபோதையிலிருந்தார். மேலும் அவர், தன்னிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டார். அதனால்தான் முதியவர் சேகரை தள்ளிவிட்டேன் என்று கூறினார் ஜெசிகா. முதியவர் சேகர் இறந்ததையடுத்து கொலை வழக்குப்பதிந்து ஜெசிகாவை கைது செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கிறோம்" என்றனர்.

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க

குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி... மேலும் பார்க்க

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளிய... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க