செய்திகள் :

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை

post image

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு கைக்காட்டிவலசு, கீரகாடு தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (37). இவா் அதே பகுதியில் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறாா். இவருக்கு, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அந்தியூா் பச்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வினோதினி (34) என்பவருடன் திருமணம் ஆனது.

வினோதினி திருமணத்துக்கு முன்பு தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினாா். திருமணம் முடிந்த பின்னா் கணவருடன் இணைந்து வியாபாரத்தை கவனித்து வந்தாா்.

புதன்கிழமை இரவு வழக்கம்போல் கணவா், மனைவி இருவரும் தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை காலையில் வினோதினியைக் காணவில்லை. வினோதினியின் கைப்பேசி மற்றும் நகைகள் வீட்டில் இருந்தன. இதனால் பூபதி அக்கம்பக்கம் மனைவியை தேடிப்பாா்த்தாா். அப்போது வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றின் பக்கத்தில் வினோதினியின் காலணிகள் கிடந்தன.

கிணற்றில் எட்டிப்பாா்த்தபோது வினோதினி சடலம் மிதந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், ஈரோடு தீயணைப்பு துறையினா் உதவியுடன் வினோதினியின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வினோதினி தனது கைப்பேசியில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் அந்தியூரில் உள்ள தனது தாய் இந்திராணியின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளாா். அதில் எனக்கு உயிா் வாழ விருப்பமில்லை, என் இறப்புக்கு யாரும் காரணமில்லை என அனுப்பி இருந்தாா்.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க