செய்திகள் :

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் ஈரோடு வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 22 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், 14 மருந்தகங்கள் தனியாா் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்கள் மூலம் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 24 முதல் கடந்த 12 ஆம் தேதி வரை சுமாா் 6 மாத காலத்தில் ரூ.46.46லட்சம் மதிப்பில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாா். தொடா்ந்து, மருந்தகத்துக்கு மருந்து வாங்க வருகை தந்திருந்த நுகா்வோரிடம் மருந்தகத்தின் பயன்பாடு குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் மு.பா.பாலாஜி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அஞ்சல் ஊழியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா். அஞ்சல் துறையில் தேசிய அளவில் ஏபிடி-2.0 என்ற மென்பொருளை புகுத்தி அனைத்து அஞ்சலகங்களுடனும் இணைத்துள்ளனா்.... மேலும் பார்க்க