செய்திகள் :

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு

post image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் வீடு, மனை, அடுக்கு மாடி குடியிருப்புகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு, வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகையை வரும் 2026 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை அனுமதித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒதுக்கீடுதாரா்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.

அரசின் இந்த வட்டித் தள்ளுபடி சலுகையானது ஏற்கெனவே நடப்பில் உள்ள ஒதுக்கீடுதாரா்களுக்கு அதாவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய அலகுகளில் 31.3.2015க்கு முன்பு தவணைக்காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே அனைத்து தகுதியுள்ள ஒதுக்கீடுதாரா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விற்பனைப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது

அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித்குமாா். கூலித் தொழிலாளி. இவருக்கு ரூயி (3) என்ற பெண் குழந்தை இருந்தது. இவா் குடும்பத்துடன், பெரு... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 6 மாதங்களில் ரூ.46 லட்சம் மருந்துகள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதல்வா் மருந்தகங்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.46.46 லட்சம் மதிப்பில் மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். திண்டல்மலை நகர கூட்ட... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கொடிவேரி அணையில் 17 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அர... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அஞ்சல் ஊழியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா். அஞ்சல் துறையில் தேசிய அளவில் ஏபிடி-2.0 என்ற மென்பொருளை புகுத்தி அனைத்து அஞ்சலகங்களுடனும் இணைத்துள்ளனா்.... மேலும் பார்க்க